This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Monday, December 9, 2013
இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே
Tuesday, December 3, 2013
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் இலங்கை பயணம்.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் ஒட்டுமொத்த நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஐ நா வின் சிறப்புத் தூதார் சாலோகா பெயானி, நேரடியாகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாக ஐ நா செய்திக் குறிப்பு கூறுகிறது.
மனித உரிமை, மீள்குடியேற்றம், போர்
அவ்வகையில் இடம்பெயர்ந்த மக்களையும், பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்திக்கவுள்ளார். தமது பயணத்தின் போது அவர் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்வார் எனவும் ஐ நாவின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் காத்திரமான தீர்வுகள் குறித்து தான் கவனம் செலுத்தவுள்ளதாக பெயானி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மற்றும் உதவிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் அவர் அங்கு விவாதிப்பார். தமது பயணத்துக்கு பிறகு தான் கண்டவை குறித்து முதற்கட்டமாக எழுத்துபூர்வமான ஒரு அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார்.
அவரது பயணம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் சமர்பிக்கப்படும்.
இன்று தொடங்கி எதிர்வரும் ஆறாம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின்போது, அரச தரப்பினர், சிவில் சமூகத்தினர் மற்றும் இலங்கையிலுள்ள ஐ நாவின் உயரதிகாரிகள் ஆகியோரையும் பெயானி சந்திப்பார் என்று அவரது பயணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
Saturday, November 30, 2013
"இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த,இந்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது". இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த,இந்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் அதற்கு ஒத்து வராததால், போரை நிறுத்த முடியாமல், இனப்படுகொலை நடந்தது,'' என, இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
'இலங்கை தமிழர் வாழ்வுரிமையும்,
இந்திய அரசின் நிலையும்' என்ற கருத்தரங்கம் சென்னையில், நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
இதில், சிதம்பரம் பேசியதாவது:
இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு நாடு. அந்நாட்டை பிரித்து, தனிநாட்டை உருவாக்கிக் கொடுக்க முடியாது. இந்தியாவில், காஷ்மீரையும், வடகிழக்கு மாநிலங்களில், நாகா மற்றும் மிசோ நாடுகளையும் கேட்டு போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு, நாட்டை பிரித்துக் கொடுத்துவிட முடியுமா? அதுபோல் தான், இறையாண்மை கொண்ட இலங்கையைப் பிரித்து, தனிநாடு உருவாக்க முடியாது.
ஆனால், 'இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வேண்டும்' என, ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டது.
இதன்படி, தமிழை, இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, ஒரே மாகாணத்தை உருவாக்க வேண்டும்.
அரசியல் மற்றும் பிற உரிமைகளை,
தமிழர்களுக்கு அளிக்க வேண்டும்.
இதற்கு, இலங்கையின் அரசியல் சாசன சட்டத்தில், 13வது திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். இதையேற்று, 13வது அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், அதை அமல் செய்ய, இலங்கை அரசு முரண்டு பிடிக்கிறது.
இதற்கிடையே, இலங்கையில், இறுதிகட்டப் போர் நடந்த, 2009ல், இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மத்திய அரசு, வெளிநாட்டில் நடக்கும் போர் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.
இதனால், பெரும் மன வருத்தம் தரக்கூடிய, இனப் படுகொலை நடந்தேறியது.
இதைப் பற்றி இனி பேசிப் பயனில்லை. இருக்கக் கூடிய, இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டியதே நமது கடமை. இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்திய பிரதமர் பங்கேற்காமல் இருந்தது, இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் இலங்கைக்கு செல்லாமல்,
வெளியுறவு அமைச்சரை காமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பியது தான், விவேகமான செயல்.
இதன்மூலம் தான், இலங்கைப் பிரச்னையில், தொடர்ந்து தலையிட்டு, தமிழர்கள் நலனை பாதுகாக்க முடியும். நாம் முழுமையாக காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்து இருந்தால், இலங்கையுடன் தொடர்ந்து உறவு கொள்ளமுடியாது. நமக்கு, விசா கொடுக்க, இலங்கை அரசு மறுக்க முடியும்.
விரைவில் இந்திய பிரதமர், யாழ்பாணத்துக்கு செல்வார். அங்கிருக்கும் முதல்வர் விக்கேனஸ்வரனுடன் ஆலோசித்து, தமிழர்களின் நலனை மேம்படுத்துவார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும்,
13வது அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச
விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். போரில் இடம்பெயர்ந்த
தமிழர்களை மறு குடியமர்வு செய்யவேண்டும்.
இதிலிருந்து, எந்த காலகட்டத்திலும்
பின்வாங்க மாட்டோம்.
இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.
Monday, November 18, 2013
மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்:இலங்கைக்கு சீனா திடீர் வலியுறுத்தல்
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று இலங்கை அரசை அதன் நட்பு நாடான சீனா திடீரென்று வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சீனா உறுப்பு நாடாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தெடுக்கப்பட்டுள்ளதால் சீனாவின் நிலைப்பாடு மாறியுள்ளதாக தெரிகிறது.
"இலங்கைப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சர்வதேச விசாரணைக்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கின் கெங் கூறியதாவது:
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மற்ற நாடுகள் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது குறித்து அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின்போது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச அளவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து என்று கின் கெங் கூறினார்.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு தேவையான நவீன கட்டமைப்பு வசதிகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் சீனா நிறைவேற்றி தந்தது குறிப்பிடத்தக்கது.
Friday, November 1, 2013
Friday, October 25, 2013
பேஸ்புக் அரட்டை : பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.கலிகாலம்!
பேஸ்புக் அரட்டை : பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.கலிகாலம்!
டில்லி பரபரப்பு:டில்லி மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
டில்லி பரபரப்பு:டில்லி மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
சேர்ந்தவன் ரவுடி டபொடியாடில்லியை. இவன் தலைக்கு 1 லட்சம் ரூபாய் டில்லி போலீசார் விலை வைத்திருந்தனர்.இன்னிலையில் டில்லி ஹயாத் ஹோட்டல் அருகே இரு நண்பர்களுடன் இருந்த டபொடியாவை டில்லி போலீசார் சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டதில் டபொடியாவும் நண்பர்கள் இருவரும் உயிரிழந்தனர்.Tuesday, October 22, 2013
அமெரிக்க விளையாட்டு: ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்.
அமெரிக்காவில் தொடர்ந்து பள்ளிகளில் குற்றச்செயல்கள் நடைபெற்றவண்ணம் உள்ளது.இன்று ஒரு கலிபோர்னியா அருகே ஒரு மாணவன் ஆசிரியரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது அமெரிக்கர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Thursday, September 19, 2013
ராஜிவ் காந்தி கொலை வழக்கு :சி.பி.ஐ.க்கு தடா நீதிமன்றம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நோட்டிஸ்.
Wednesday, September 18, 2013
அண்ணா மேம்பாலத்தில் இருந்து 26 வயது பெண் கீழே குதித்து பட்டப்பகலில் தற்கொலை:கள்ளக்காதல் காரணம்!
26 வயது இளம்பெண் ஒருவர் சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து நண்பகல் நேரத்தில் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பையும் சோகத்தையும் ஒரு சேர உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே திருமணமான இந்தப் பெண்ணின் கள்ளக்காதல்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது அதைவிட கலாச்சார வேதனை.
Monday, September 16, 2013
click video
https://www.youtube.com/watch?v=yv_DOwex1sM
அமெரிக்க பயங்கரம்:ராணுவ உடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:வாஷிங்டன் கடற்படை தளத்தில் பயங்கரம்.13 பேர் பலி.
மும்பையில் கொடுமை :4 வயது சிறுமி பாலியல் பலத்காரம்
Sunday, September 15, 2013
இனப்படுகொலை நடக்கும் போது கண்டுகொள்ளாமல் இருந்த திமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி கிடையாது: வைகோ
Saturday, September 14, 2013
டீக்கடையில் வாழ்க்கையை துவங்கி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக உயர்ந்துள்ள மோடி!
திருமணம் புரியாமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிய இவர், பல்வேறு மூத்த தலைவர்களின் கவனத்தை கவர்ந்தார். அதனால், 1995ல், ஐந்து மாநில பொறுப்புகளை கவனிக்கும், கட்சியின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார். 1998ல், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய கட்சித் தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மோடி தன் பணியை திறம்படச் செய்து, கட்சியில் தன் முக்கியத்துவத்தை நிரூபித்தார். 2001ல், குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, அப்போது, எம்.எல்.ஏ.,வாக இல்லாத மோடி, மேலிடத் தலைவர்களால் நேரடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியில் இவரைப் போன்ற ஏழ்மையான பின்னணி கொண்ட தலைவர் இல்லை. மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விவசாயம், சிறு தொழில் மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சியையே முக்கிய நோக்கமாக கொண்டவர் மோடி.சமூகத்தின் அனைத்து பிரிவினரினரும் வளர்ச்சி அடைய உழைத்து வருகிறார்.மற்ற கட்சிகளைப் போல், போலி மதச்சார்பின்மை பேசி நடிக்கவில்லை.அதே போல், என்றுமே தான் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்துள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் விளம்பரப்படுத்தாதவர் மோடி.அனைவரும் சமம் என்பதே மோடியின் தாரக மந்திரம்.இதன் காரணமாக, யாரையும் சரிகட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் மோடி.
முதல்வரான பின், கட்சி வளர்ச்சி மட்டுமின்றி, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்திய மோடி, 2002, 2007 மற்றும் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், அடுத்தடுத்து, ஹாட்ரிக் வெற்றி பெற்றார். குஜராத்வரலாற்றிலேயே, நீண்ட காலம் முதல்வராக இருக்கும் பெருமையையும் பெற்றுள்ளார்.





















