அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, September 19, 2013

ராஜிவ் காந்தி கொலை வழக்கு :சி.பி.ஐ.க்கு தடா நீதிமன்றம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நோட்டிஸ். 

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரரிவாளன் தொடர்ந்த வழக்கில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் ,அதன் தலைவர்கள் மற்றும் தாணு தங்க இடமளித்த காங்கிரஸ் பெண் பிரமுகர் ஆகியோரை விசாரணை நடத்தாதது சுட்டிக்காட்டபட்டதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Wednesday, September 18, 2013

அண்ணா மேம்பாலத்தில் இருந்து 26 வயது பெண் கீழே குதித்து பட்டப்பகலில் தற்கொலை:கள்ளக்காதல் காரணம்!



26 வயது இளம்பெண் ஒருவர் சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து நண்பகல் நேரத்தில் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பையும் சோகத்தையும் ஒரு சேர உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே திருமணமான இந்தப் பெண்ணின் கள்ளக்காதல்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது அதைவிட கலாச்சார வேதனை.
Share:

Monday, September 16, 2013

பி.பி. ஸ்ரீநிவாஸ் நெஞ்சம் மறப்பதில்லை (slide show)
click video

https://www.youtube.com/watch?v=yv_DOwex1sM
Share:

தேர்தல் வியூகம் கருணா நிதி அறிவிப்பு

தேர்தல் வியூகம் குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு விரைவில் அறிவிக்க உள்ளதாக கருணா நிதி பதில் அளித்துள்ளார்.தொண்டர்கள் ரெடியா?
Share:

அமெரிக்க பயங்கரம்:ராணுவ உடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:வாஷிங்டன் கடற்படை தளத்தில் பயங்கரம்.13 பேர் பலி.

அமெரிக்க தலை நகர் வாஷிங்டன் கடற்படை தளத்தில் ராணுவ உடையில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அதிகாரிகள் இருவர் , காவல் துறை,பொதுமக்கள் என 13 பேர் பலியாகினர்.தாக்குதல் நடத்திய ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.அமெரிக்க அதிபர் இச்சம்பவத்தை கோழைத்தனமான செயல் என்று கண்டனம் செய்துள்ளார்.
Share:

மும்பையில் கொடுமை :4 வயது சிறுமி பாலியல் பலத்காரம்

மும்பையில் பள்ளி பேருந்து ஒன்றில் 4 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தானேவில் உள்ள ஒரு பள்ளியின் பேருந்தில் வகுப்பு முடிந்து 4 வயது சிறுமியும் அவளது தோழியும் அமர்ந்துள்ளனர்.

சிறுமியும் அங்கு சென்றுவிட, அந்த நபர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். சிறுமியின் தோழி அவளை பாதுகாக்க முயன்றப்போது, அந்த கிளீனர் நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் இரண்டு பேரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான்.

இதனால் பயந்துப்போன சிறுமிகள் இருவரும் யாரிடமும் இது குறித்து பேசவில்லை. இந்நிலையில் சிறுமியை உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து சிறுமி, தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் பள்ளி பேருந்து கிளீனர் கைது செய்யப்பட்டு அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
Share:

செம்மொழி மா நாட்டில் ஊழல் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

செம்மொழி மா நாட்டில் 200 கோடி ரூபாய்  ஊழல் நடந்துள்ளதாக வழக்கறிஞர் ரமேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Share:

போலாந்து பெண் ஒரு லட்சம் ஆண்களுடன் உடலுறவு கொள்ள போவதாக அறிவிப்பு.

போலாந்து பெண் 21 வயது லிசவ்ச்கா .இவர் ஒரு லட்சம் ஆண்களுடன் உடலுறவு கொள்ள போவதாக அறிவித்தது மட்டுமல்லாமல் இதர்கென உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.மொராக்கொ,எஹிப்து நாடுகள் இவ்ருக்கு தடை விதித்துள்ளன.
Share:

கடைசி அணு உலையையும் ஜப்பான் மூடியது


ஜப்பான் நாட்டில் செயல்பட்ட கடைசி அணு உலைமுன் அறிவிப்பின்றி மூடப்பட்டது.பராமரிப்பிற்காக என்று சொல்லப்பட்டாலும் திறக்கப்படும் தேதி சொல்லப்படவில்லை.
Share:

Sunday, September 15, 2013

இனப்படுகொலை நடக்கும் போது கண்டுகொள்ளாமல் இருந்த திமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி கிடையாது: வைகோ
 
இனப்படுகொலை நடக்கும் போது காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்த திமுக அதை கண்டுகொள்ளாமல் இருந்தது, அதனால் வரும் மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கிடையாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
        தொண்டர்களின் எண்ணப்படியே மக்களவை தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இதில், முதல் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களை சேர்க்க வேண்டும்.  யாரோடு கூட்டணி என்பது எனக்கும், எனது கட்சி தொண்டர்களுக்கும் மறைமுகமாக தெரியும். சரியான நேரம் வரும் போது அறிவிப்பை வெளியிடுவேன். ஊழல் மற்றும் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் அரசு அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும். இந்த மாற்று அரசு அமைப்பதற்காக மதிமுகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

   தமிழகத்தில் பொதுமக்களின் பிரச்னைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால், பொதுமக்களின் கவனம் முழுவதும் மதிமுகவின் பக்கம் திரும்பியுள்ளது. உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு புதுதில்லிக்கு அனுப்பி வையுங்கள். அதேபோல், இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் வைகோ.
Share:

Saturday, September 14, 2013



டீக்கடையில் வாழ்க்கையை துவங்கி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக உயர்ந்துள்ள மோடி!

குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டம், வத் நகரில், 1950 செப்டம்பர், 17ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, குஜராத் பல்கலைக் கழகத்தில், அரசியல் அறிவியலில், முதுகலை பட்டம் பெற்றார்.பள்ளிப் பருவத்திலேயே, அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட அவர்,பட்டப் படிப்பு முடித்த பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், தன்னை இணைத்துக் கொண்டார். தன் சகோதரருடன், டீக்கடை நடத்தி வந்த மோடி, பா.ஜ.,வில், அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றினார். பா.ஜ., கட்சியில், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல் தலைவர் மோடி.

திருமணம் புரியாமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிய இவர், பல்வேறு மூத்த தலைவர்களின் கவனத்தை கவர்ந்தார். அதனால், 1995ல், ஐந்து மாநில பொறுப்புகளை கவனிக்கும், கட்சியின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார். 1998ல், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய கட்சித் தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மோடி தன் பணியை திறம்படச் செய்து, கட்சியில் தன் முக்கியத்துவத்தை நிரூபித்தார். 2001ல், குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, அப்போது, எம்.எல்.ஏ.,வாக இல்லாத மோடி, மேலிடத் தலைவர்களால் நேரடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியில் இவரைப் போன்ற ஏழ்மையான பின்னணி கொண்ட தலைவர் இல்லை. மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விவசாயம், சிறு தொழில் மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சியையே முக்கிய நோக்கமாக கொண்டவர் மோடி.சமூகத்தின் அனைத்து பிரிவினரினரும் வளர்ச்சி அடைய உழைத்து வருகிறார்.மற்ற கட்சிகளைப் போல், போலி மதச்சார்பின்மை பேசி நடிக்கவில்லை.அதே போல், என்றுமே தான் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்துள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் விளம்பரப்படுத்தாதவர் மோடி.அனைவரும் சமம் என்பதே மோடியின் தாரக மந்திரம்.இதன் காரணமாக, யாரையும் சரிகட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் மோடி.
முதல்வரான பின், கட்சி வளர்ச்சி மட்டுமின்றி, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்திய மோடி, 2002, 2007 மற்றும் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், அடுத்தடுத்து, ஹாட்ரிக் வெற்றி பெற்றார். குஜராத்வரலாற்றிலேயே, நீண்ட காலம் முதல்வராக இருக்கும் பெருமையையும் பெற்றுள்ளார். 
Share:

மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும்:பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நாட்டை ஆளும் தகுதியும் திறமையும் படைத்த நரேந்திர மோடி மக்களின் அமோக ஆதரவுடன் பிரதமராவது உறுதியாகிவிட்டது.வருகிற 26ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் வெறும் நடிகர் மட்டுமல்ல. நாட்டு மக்களை நேசிக்கும் நல்ல மனிதர். நாட்டில் நல்லாட்சி மலர மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support