அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, July 24, 2018

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த தனியார் 🏩விடுதி வார்டன் தலைமறைவு!

*👩மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த தனியார் 🏩விடுதி வார்டன் தலைமறைவு😳*



பேராசிரியர் 👵நிர்மலா தேவி போல கோவையில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் 👩பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள மற்றுமொரு 🏨பெண்கள் விடுதி வார்டன் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்🙄 என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 🤵ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் 👵புனிதா என்பவர் காப்பாளராக உள்ளார்😯. விடுதியில் தங்கியுள்ள மாணவி சிலரை 🎂பிறந்தநாள் பார்ட்டி என்று கூறி ⭐நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்ற புனிதா, மாணவிகளை 🍾மது அருந்த வற்புத்தியுள்ளார்😓. மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் 📲செல்போன் வாட்ஸ் ஆஃப் 📹வீடியோ அழைப்பில் பேசும் படி கூறி இருக்கிறார். பெரும்பாலும் 🍾மது போதையில் இருக்கும் புனிதா பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது😱. இதனால் மாணவிகள் பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிவிக்க🔈 பெற்றோர்களும் உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பயந்து போன விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவாகியுள்ளது😡 குறிப்பிடத்தக்கது.



Share:

வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை

 வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை
அய்யன் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திட்ட அருமையான படமான "ராமன் எத்தனை ராமனடி" நாமெல்லாம் ரசித்து மகிழ்ந்தது. "சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” நாடகத்தைப் பார்க்க முடியாத ஏக்கம் ரசிகர்களாகிய நம்மில் பலருக்கு இருந்திருக்கும். அண்ணா எழுதிய அந்த நாடகத்தை படிக்க வேண்டும் என்றஆசை இன்னும் என்னுள் இருக்கிறது. அதற்கு இப்படம்
நம் குறையை தீர்த்து வைத்தது.

ஒரு காட்சியில் நம்மய்யன் மராத்திய சிவாஜியாக வந்து வீர வசனம் பேசுவார். அவரின் வசன உச்சரிப்பின் ஏற்ற தாழ்வுகள். சிம்மம் போன்ற கர்ஜனை. அவர் கைககளை ஆட்டிப் பேசும் தோரனை அவரின் வித்தியாச வித்தியாசமான நடைகள் நம்மை எங்கோ உச்சத்தில் கொண்டு நிறுத்திவிடும். ஆச்சரியப் படவைக்கும். இதெல்லாம் எந்த நடிகரால் செய்ய முடியும்?
சரி, இந்நாடகம் எதற்காக அண்ணாவால் எழுதப்பட்டது என்ற வினாவிற்கு பதிலறிய வேண்டுமல்லவா? ஒரு காலத்தில் மேல் சாதி மக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு
வடிகால் தேடும் முயற்ச்சியால் பகுத்தறிவு பகலவனால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமான திராவிடர் கட்சிக்கு பிரட்சார நாடகங்கள் தேவைபட்டது. அதற்காகத்தான் இந்நாடகம் எழுதப்பட்டது. அதற்காகத்தான் சத்திரபதி சிவாஜியின் பாத்திரத்தை அண்ணா தேர்வு செய்தார்.

சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொள்ள நினைத்தபோது அவர் சூத்திரன் என்று சில எதிர்ப்புகள் கிளம்பியது. அவரை காகபட்டர் என்ற உயர் சாதி குரு எப்படி எல்லாம் சிவாஜியை பட்டம் ஏற்க முடியாத அளவிற்கு அலகழித்தார் என்பதே இக்கதையின் நோக்கம். காகபட்டருக்கு ஒவ்வொரு செயலிலும் உயர் சாதிதத்தான் உயர்ந்தது என காட்டுவதே அவரின் வாடிக்கை.
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் காகபட்டர் வேடத்தில் நடித்தவர் யார் தெரியுமா?
அறிஞர் அண்ணா.

சிவாஜியும் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக சில “பகுத்தறிவாளர்களின்” அதிருப்தியை அலட்சியப்படுத்தி பட்டருக்கு அடங்கிபோனார் என்று இந்நாடகத்தின் கதை எடுத்துரைக்கிறது.

 இந்நாடகத்தின் இன்னொரு பெயர் சந்திரமோகன். சந்திரமோகன் ஒரு பகுத்தறிவாளன், அவன் சிவாஜியின் விசுவாசமான தோழன். கதைபடி சந்திரமோகன்தான் நாடகத்தின் கதாநாயகன்.
1945-இல் எழுதி இருக்கிறார்.

காணொளியை பார்த்து வசனத்தை கேட்டு எழுதியது:

"அரசே தங்களின் முடிசூட்டு விழாவிற்கு ஒரு கறை வீழ்ந்திருக்கிறது."

"ஏன் மகுடம் தயாராகவில்லையா?

"இல்லை"

"பிறகு?.........காரணம்?"

"தாங்கள் தாழ்ந்த ஜாதியாம்..... அரசியலே  அறியமாட்டீர்களாம். அதனால்
முடிசூட்டிக்கொள்ள முடியாது."

"தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ஹூம்! யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களேங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், மராட்டியம் என்றே முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.

அரசியலை நான் அறியாதவனா? ஹ… அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ… எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல! என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா? ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு நாமேதான் நாடொன்று தலைதூக்கித் திரியும் அந்த புல்லுருவிகள் எனது முடியைத் தடுக்கிறார்களா அல்லது தங்கள் முடிவைத் தெடுகிறார்களா?

அதோ போர்ணா! கொட்டிய முரசும், கூவிய படையும் எட்டிய பரியும் எழுந்து நடந்து கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து, வாழ்க சிவாஜி வாழ்கவென்று வாழ்த்துரை கூறி வழங்கியபோது, ஓஹோ என்று எதிரொலித்ததே இந்தக் கோட்டைத்தான்.

அதோ புரந்தர்! போகாதீர்கள்! படை பலம் அதிகம்! கோட்டை முன்னால் தடைகளும் அதிகம். ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை! இடுப்பொடிந்தோரெல்லாம் இல்லத்திருங்கள்; கோழைகள் விலக வீரர்கள் வரட்டும். ஏறு முன்னேறு என எக்காளமிட்டு பகைவர் தலைகளை கனியென கொய்து முரசும் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான். புரந்தர்! இதுதான்!

அதோ ராஜகிரி! ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரிக்க, இதுவும் முடியும்… இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க மராட்டிய மண்டல மக்கள் களிக்க நான் கட்டுக்காத்த கோட்டை இதுதான்.

அதோ கல்யாண்! கண்ணீர்விட்டு கதறிய பெண்கள், ஐயோ என்று அலறிய குழந்தைகள், முடிவறியாது தவித்த முதியோர் கொடியோர் கையில் சிக்கிக் கிடந்தனர்! பகைவர் பொடிப் பொடியாக போர்க்கலம் ஏந்தி மராட்டியக் கொடியை நான் ஏற்றிய கோட்டை இதுதான்.

என்னையா கேட்டார்கள்; நீ யாரென்று! எவன் இந்த மண்ணனுக்கு சொந்தக்காரனோ! எவனது நெற்றியில் எப்போதும் ரத்தத் திலகம் திகழ்ந்து கொண்டேயிருக்குமோ, அவனைப் பார்த்து வாழ வந்த வஞ்சகக் கூட்டம் கேலி பேசுகிறதாம்! தாழ்ந்த ஜாதி… அரசியலை அறியாதவன் என்று! இதுதான் முடிவென்றால்… இல்லையெனக்கு முடியென்றால், நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ? கொத்தளங்கள் வேண்டுமோ? வெற்றி பாட்டு வேண்டுமோ? பரவசம் வேண்டுமோ? கரையான் புற்றென்ன கருநாகங்களுக்கு சொந்தமோ? அடிபடட்டும் கோட்டைகள்! இடியட்டும் மதில் சுவர்கள்!
அன்னை பவானி! அன்னை பவானி! உன் கண்கள் சிவகட்டும்! மின்னல் ஒளிரட்டும்! இடி இடிக்கட்டும்! சூறை காற்று மோதட்டும்! கொடு மழை பொழியட்டும்! கொடியவர்கள் அழியட்டும்! கொடியவர்கள் அழியட்டும்!"

அன்புடன்....
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை
 RV

திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

மாநாட்டில் நடிப்பதற்காக “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.

இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:- சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன். மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி! இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன் பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள்.

இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது.

இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார். என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

“திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த வி.சி. கணேசன் (இன்னும் சிவாஜி கணேசன் ஆகவில்லை), இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.

எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.

இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.

“நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.

மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.

சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.

அண்ணா சிவாஜியை கட்டித் தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.

“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.

சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.

பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.

“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப் பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜி கணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்று சிவாஜி கணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

அண்ணாதுரையின் “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்”  ~RV

"ராமன் எத்தனை ராமனடி வீடியோவில் முதலில் சிவாஜியிடம் வந்து அவர் முடி சூட்டிக் கொள்ள எதிர்ப்பு இருப்பதைத் தெரிவிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒரு முக்கியமானவர். அவர் பெயர் எஸ்.ஏ.கண்ணன். அவரும் சிவாஜி கணேசனும் பத்து வயதுச் சிறுவர்களாக இருந்தபோது ஒரே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கியவர்கள். பராசக்தி படத்திலும் கோர்ட் சீனில் கண்ணன் ஒரு வக்கீலாகத் தோன்றி “உனக்கேன் அவ்வளவு அக்கறை ?” என்று கேட்பார். சிவாஜி தனக்கென்று சொந்தமாக ஒரு நாடக மன்றம் தொடங்கியபோது அதன் இயக்குநராகவும் நிர்வாகியாகவும் இருந்தவர் கண்ணன். வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப் பதக்கம் ஆகியவற்றையெல்லாம் நாடகங்களாக இயக்கியவர் அவர்தான். அண்மையில் காலமானார்.
காகபட்டர் நிஜ மனிதர். காசியைச் சேர்ந்தவர். சிவாஜி சூத்திரன், ஷத்திரியன் அல்ல என்பதால் முடி சூட்டிக் கொள்ளும் தகுதி இல்லை என்று சித்பவன் பிராமணர்கள் சொன்னதும் சிவாஜியின் தூதர்கள் காசிக்குச் சென்று அங்கே செல்வாக்குள்ள பண்டிதரான காகபட்டரிடம் உதவி கேட்கிறர்கள். அவர் ஒரு ஹோமம் நடத்தி சிவாஜியை ஷத்திரியனாக்கி முடி சூட்ட வழி இருப்பதாக சொல்லி அதன்படியே மராட்டியத்துக்கு வந்து முடிசூட்டி வைக்கிறார். இது சரித்திரத்தில் நடந்தது. இது பற்றி டாக்டர் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். காகபட்டரை முற்போக்கான உயர்சாதியினருக்காக வியாக்யானம் செய்யும் சரித்திர ஆசிரியர்களும் உண்டு. அம்பேத்கர் காகபட்டரை முற்போக்காளராக பார்க்கவில்லை. சித்பவன் உயர் சாதியினரின் பிடிவாதம் அவர்களுக்கே எதிரானது ஆகிவிடும். சிவாஜிக்கு பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதால் அவன் எப்படியும் மன்னனாகிவிடுவான். அதைத் தடுத்த உயர்சாதி அரசு ஆதரவை இழப்பார்கள். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து அரசில் உயர்சாதி செல்வாக்கை தக்க வைப்பதற்காக காகபட்டர் சூழ்ச்சி செய்து சிவாஜிக்கு முடிசூட்ட முன்வந்தார் என்பதே அம்பேத்கரின் கருத்து. அண்ணா அதைப் பின்பற்றியே தன் நாடகத்தை எழுதினார்."

⭐ நீண்ட கட்டுரையில் தேவையானவற்றை மட்டுமே பதிவாக்கியுள்ளேன்.

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
Share:

Saturday, July 21, 2018

நடிகர் திலகத்திற்கு ஒரு நினைவாஞ்சலி💐

நடிகர் திலகத்திற்கு ஒரு நினைவாஞ்சலி💐நடிகர் திலகத்திற்கு ஒரு நினைவாஞ்சலி💐


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 17வது நினைவு தினம் இன்று, நடிப்பில் சிவாஜியைப் போல வரவேண்டும் என்று நேற்று கோடம்பாக்கத்தில் கால் வைத்த இளைஞர்களைக் கூட நினைக்க வைத்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன்.

300 படங்களுக்கும் அதிகமாக நடித்து சுமார் 47 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர். சிவாஜி நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் பராசக்தி இன்றளவும் அதன் வசனங்களுக்காக பேசப்படும் ஒரு படமாக மாறியுள்ளது.

தேசிய விருது, பத்மபூஷன் விருது, செவாலியர் விருது, தாதா சாகேப் பால்கே விருது மற்றும் கலைமாமணி உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி இருக்கிறார். 2001 ம் ஆண்டில் சிவாஜி கணேசன் இறந்தபோது தமிழ்நாடே ஸ்தம்பித்தது.
அந்த அளவிற்கு தமிழர்களின் வாழ்வில் இரண்டாகக் கலந்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன், அவரது நினைவு தினமான இன்று அவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த 5 திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பராசக்தி
சிவாஜி அவர்களின் நடிப்பில் 1952 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பராசக்தி, கடவுள் மறுப்புக் கொள்கைகளை அந்தக் காலத்திலேயே துணிச்சலாக எடுத்துக் கூறிய இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக மாறியது. கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பராசக்தி படத்தில் இடம்பெற்ற " ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்" என்ற வசனம் தமிழின் தலைசிறந்த 10 வசனங்களில் இன்றளவும் முதலிடத்தில் உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்

1959 ம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன், விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் படம் இது. படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த சிவாஜி தனது நடிப்பால் ரசிகர்களின் கண்முன்னே கட்டபொம்மனைக் கொண்டுவந்து நிறுத்தி இருந்தார்.

மானம் கெட்டவனே

இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.படத்தில் இடம்பெற்ற
வரி, வட்டி, கிஸ்தி....யாரை கேட்கிறாய் வரி...எதற்கு கேட்கிறாய் வரி...வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது...உனக்கேன் கட்டவேண்டும் வரி...
எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா?அல்லது கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள்அரைத்தாயா?
மாமனா? மச்சானா/மானங்கெட்டவனே? என்ற வசனங்களைப் பார்க்காத கேட்காத தமிழர்கள் இல்லை என்றே சொல்லலாம், அவ்வளவு புகழ் பெற்ற வசனம் இது

தில்லானா மோகனாம்பாள்
நடிகர் திலகம் சிவாஜியும், நாட்டியப்பேரொளி பத்மினியும் போட்டி போட்டு நடித்த திரைப்படம் இது. சிவாஜியின் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்த படங்களில் இதுவும் ஒன்று, படத்தில் இடம்பெற்ற "நலந்தானா" மற்றும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம்" என்ன போன்ற பாடல்கள் இன்றளவும் தமிழின் எவர்கிரீன் பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தப் படத்தின் தாக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம்தான் ரகுமான்- விந்தியா நடிப்பில் வெளிவந்த சங்கமம் திரைப்படம்.

மனோகரா வசனங்கள்
1954 ம் ஆண்டு வெளிவந்த மனோகரா திரைப்படம் கலைஞரின் எழுத்துத் திறமைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்தது, படத்தில் இடம்பெறும் தர்பார் வசனங்கள் மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்

மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சிவாஜியிடம் அவரது தாய் கண்ணாம்பா கூறுவார் இன்றளவும் புகழ்பெற்ற வசனமாக விளங்குகின்றது. படத்தில் எல்லோராலும் பாராட்டுப் பெற்ற தர்பார் மண்டப வசனங்கள்.

மனோகரா தர்பார் மண்டப வசனங்கள்
அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.
அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.
மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?
அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!
மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.
இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?
சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.
அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.
மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!
அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!
அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?
மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.
அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.
மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!
அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?
மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"

ராஜராஜசோழன்
தஞ்சை தமிழ் மண்ணில் பிறந்த நடிகர் சிவாஜி உலகையே ஒரு குடைக்குக் கீழ் கொண்டுவந்த மாமன்னர் ராஜராஜசோழனாக, ராஜராஜசோழன் படத்தில் நடித்திருப்பார். வழக்கம் போல தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டார் இந்தப் படத்தில். 1973 ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற தூய வசனங்களும், பாடல்களும் பலரது பாராட்டைப் பெற்றவை.
குறிப்பாக "ஏடு தந்தானடி தில்லையிலே" என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. 42 வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த இந்தத் திரைப்படம் சுமார் 1.2 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது.

Share:

Tuesday, July 17, 2018

1டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன?

#1டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன?
ஒரு நிமிடம் இதை படித்து பாருங்கள்.
செய்தியை சரியாக சொல்லுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்த செய்தி சாமான்யனுக்கும் புரியும் அளவில் இருக்கவேண்டும் அண்மைக்காலத்தில் பெரும்பாலானோரை பேச வைக்கும் விஷயம். காவிரி ஆறும் அது தொடர்பாக ஆண்டுக்கணக்கில் நடந்த சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும்..
காவிரி மேலாண்மை ஆணையம், அது செயல்படப்போகிற விதங்களையெல்லாம் விட்டுவிடுவோம். அதைவிட முக்கியமானது கர்நாடக அணைகள், காவிரி ஆறு, மேட்டூர் அணை, டிஎம்சி போன்றவை தொடர்பான விஷயங்கள் பற்றி ஒரு பாமரனுக்கு எளிதான புரிதல் முயற்சியை செய்வோம்.
தமிழகத்தில் திருச்சி கல்லணையில் காவிரி, கொள்ளிடம் என பிரிந்துபோய் இருவேறு இடங்களில் கடலில் கலக்கிறது. அதே காவிரிதான், கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி பின்னர்தான் முழுமையான காவிரியாக உருவெடுக்கிறது
கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அதை தமிழகம் வாங்கி வைத்து தேக்குகிற ஒரே இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இந்த மேட்டூருக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்ப்போம்.
மேட்டூருக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், இரண்டு அணைகளிலிருந்துதான் நேரடியாக கிடைக்கிறது.. ஒன்று கேரளா- கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணை.. அங்கு திறக்கப்பட்டால் கபினி ஆறாக வந்து, 150 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து திருமுக்கூடலு நர்சிபூர் என்ற கோவில் நகரத்தில் காவிரியுடன் கலந்துவிடுகிறது. பின்னர் அப்படியே ஒகேனெக்கலுக்கும் வந்து சேரும்..
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தரும் பிரதான இன்னொரு அணை மைசூருவிலிருக்கும் கிருஷ்ணராஜசாகர் என்ற கேஆர்எஸ்.. இங்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரியாக வந்து திருமுக்கூடலு நர்சிபூரில் கபினி தண்ணீரை ஸ்வீகரித்துக்கொண்டு முழுமையான காவிரியாக வலுப்பெற்று ஒகேனெக்கலுக்கு வரும்.
காவிரி என்றால் ஹேமாவதி, ஹாரங்கி என்று மேலும் இரண்டு அணைகள் பெயர் அடிபடுமே அவைகள் எங்கே? இந்த இரு அணைகளும் நிரம்பி அவற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும்.
கபினியிலிருந்து நேராகவும் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் மூலமாகவும் தமிழகத்திற்கு காவிரியில் கிடைக்கிறது..
காவிரியின் நான்கு அணைகளை திறக்காமல் கர்நாடகம் எவ்வளவு தண்ணீர் தேக்கிவைக்க முடியும்? கபினி அணை 15.67 டிஎம்சி.. ஹேமாவதி 35.76 டிஎம்சி ஹேரங்கி அணை 8.07 டிஎம்சி. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05. என மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கலாம்.
தமிழகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டிஎம்சி என்பதை இங்கே நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்..
ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எந்த அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக் ஃபீட்.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன்.
இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?
அடுத்து அணைகளின் கொள்ளளவை பார்ப்போம்.. ‘’ஒரே நாளில் ஐந்தடி உயர்ந்தது.. பத்து அடி உயர்ந்தது.. 80 அடியை தாண்டியது… 100 அடியை தொடப்போகிறது.. என்றெல்லாம் டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூசை அடிப்பார்கள். ஆழ்ந்து யோசித்தால் இந்த அடி கணக்கால் ஒரு பிரயோஜனமும் கிடையாது..
கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி. தண்ணீர் கொள்ளளவு 45.05 டிஎம்சி. மேட்டூர் அணையின் உயரமோ 120 அடி. ஆனால் கொள்ளளவு 93.4 டிஎம்சி.. அதாவது மேட்டூரில் இரண்டு கேஆர்எஸ்சை வைத்துவிடலாம்.. மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாசர்களை மேட்டூரில் வைக்கலாம்..
நம்ம திருவண்ணாமலை சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.
நிலைமை இப்படியிருக்க, இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது என்று அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பத்தில் முழு அர்த்தம் உள்ளதா?
நமது மேட்டூர் அணைக்கே வருவோம். அதில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி.. 75 அடியை தொட்டால் 37 டிஎம்சி.. 100 அடி..100 அடி என்று சொல்வார்களே அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்.. ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும். அதாவது மேட்டூர் அணை 100 லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணை அளவுக்கு தண்ணீர் தேவை.
அப்படியென்றால் முல்லைப்பெரியாறு வைகை, கிருஷ்ணகிரி போன்ற அணைகளில் இத்தனை அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது..உயர்ந்துகொண்டே இருக்கிறது என்று அடிக்கணக்கை மட்டும் வைத்து தகவலைச்சொன்னால் அங்கே பரபரப்பை தவிர என்ன இருக்கப்போகிறது. என்னதான் புரிந்துவிடப்போகிறது?
அணை தொடர்பான செய்தி என்றால் பாமரர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாக இருக்கவேண்டும். எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது என்பதோடு, அணையின் கொள்ளளவில் எவ்வளவு நீர்,  எத்தனை சதவீதம் நீர் இருக்கிறது என்று சொன்னால் சுபலத்தில் புரிந்துவிடும்..
இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடியை தொட்டுவிட்டது. நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57சதவீதம்.. அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..
‘’120 அடியில் 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு.. 100 அடியை தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை..
Share:

மோடி பற்றி ராஜா சர்ச்சை பேச்சு

மோடி பற்றி ராஜா சர்ச்சை பேச்சு!
https://www.youtube.com/watch?v=N5_Z7MzTihU
Share:

உலகின் மிகப்பெரிய கப்பல்.

உலகின் மிகப்பெரிய கப்பல்..https://www.youtube.com/watch?v=ErHpqLQbH8U
Share:

Thursday, July 12, 2018

வாக்கு பதிவு ப்ராடுகளை தடுக்க வழி video

வாக்கு பதிவு ப்ராடுகளை தடுக்க வழி video         
      https://www.youtube.com/watch?v=7GRLg5iPauo
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support