அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, September 6, 2015

பாரதிராஜா-இளையராஜா நட்பும்,நடப்பும்

எங்கள் இனிய தமிழ் இயக்குநர் பாரதிராஜாவுக்கு வணக்கம்.
கடந்த வாரம் ஒரு வார இதழில் தங்கள் பேட்டியில் 'இசையமைப்பளர் தேவேந்திரன் இளையராஜாவை விட இசை அதிகமாக தெரிந்தவன். அவருக்கு வாய்ப்பு கொடுத்த பிறகுதான் எனக்கும் இளையராஜாவுக்கும் பிரிவு வந்தது,' என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இதை நீங்கள் சொல்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. காரணம். தேவேந்திரன் நல்ல இசைக் கலைஞர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே. இப்போது நீங்கள் இதைச் சொல்வதற்கு காரணம் உங்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு காலத்தில் நட்பிற்கு உதாரணமாக சொல்லப்பட்ட இளையராஜா - பாரதிராஜா என்கிற தோழமை சீர்குலைய நீங்கள்..... ஆம், நீங்கள் மட்டுமே காரணமாக அமைந்து விட்டீர்கள்.
உணர்ச்சி வசப்பட்டாலும் உண்மையைப் பேசும் நீங்கள் இப்போது மட்டும் சில உண்மையை மறந்து விட்டீர்கள். அதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பொம்மலாட்டம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல், இளையராஜா இருவரும் கலந்து கொண்டனர். அதில் இருவரும் பேசியது நினைவிருக்கிறதா?
கமல் பேசும்போது, "இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா. ஆனால் இந்த விழாவிற்கு இளையராஜா வந்திருக்கிறார். தான் இசையமைத்த பட விழாக்களுக்கே போகாதவர் இளையராஜா. அப்படியிருந்தும் இங்கு வந்திருக்கிறார் என்றால் பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இருக்கும் நட்பு என்னை வியக்க வைக்கிறது," என்றார்.
இளையராஜா பேசும்போது, "என்னைப் பற்றிய வாழ்க்கை வரலாறு எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்து விட்டுப்பார்த்தால் எல்லா இடத்திலும் பாரதிதான் இருக்கிறார்," என்று நெகிழ்ந்து குறிப்பிட்டு இருவரின் நட்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நீங்கள் பொல பொலவென கண்ணீர் விட்டு அழுதீர்களே... நினைவிருக்கிறதா? அது நீங்கள் சொன்ன அந்த பிரிவுக்கு பிறகு நடந்த சம்பவம்தானே. அப்போ நீங்கள் வடித்தது நிஜ கண்ணீரா? நீலிக் கண்ணீரா?
அன்னக்கொடி படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. அந்த விழாவிற்கு இளையராஜாவை நீங்கள் அழைத்தீர்கள்... சில காரணங்களால் அவரால் வர முடியவில்லை. ஆனாலும் நீங்கள் அவரிடம் கோபித்துக்கொண்டு, "நான் ரஜினி, கமல் இருவரையும் வைத்து இந்த விழாவை நடத்திக்கட்டுகிறேன் பார்..." என்று சூளுரைத்துப் போனீர்கள். ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து விடவே, சில நாட்கள் கழித்து திரும்பி வந்து, "விழாவில் நீ இல்லாவிட்டால் பெரிய அளவில் பேசப்படாது" என்று மீண்டும் இளையராஜாவை அழைத்தீர்கள். உங்கள் நிலைக்காக விழாவுக்கு வந்தார். ஆனால் அப்படி வந்த அவருக்கு நீங்கள் கொடுத்த மரியாதை என்ன என்பது உலகத்திற்கே தெரிந்த விஷயம். உங்களுக்குதான் தெரிய வாய்ப்பில்லை!
அன்று பார்த்திபன் மட்டும் இல்லாமலிருந்தால் காலகாலமாக நீங்கள் சேர்த்து வைத்திருந்த புகழுக்கு களங்கம் வந்திருக்கும். அந்த அளவுக்கு 'நிலை கொள்ளாமல்' இருந்து இளையராஜாவை அவமதித்தீர்கள். ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். காரணம் உங்கள் மீது அவர் வைத்திருந்த பாசம்.
ஒரு சம்பவம் தெரியுமா... ஜெயகாந்தன் மறைந்த போது இளையராஜா சார்பில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதை இளையராஜாவிடம் காட்டியபோது 'பாரதிராஜா பேரை விட்டுடீங்களே. அதை சேர்த்துட்டு கொடுங்க" என்று சொல்லியிருக்கிறார். இப்படி எந்த இடத்திலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் தார்மீக ஆதரவு கொடுத்து வருபவர் இளையராஜா. ஆனால் நீங்கள் மட்டும்தான் எல்லா மேடைகளிலும் நட்பு என்கிற பெயரில் இளையராஜாவை தரம் தாழ்த்திப் பேசி வருகிறீர்கள்.
தேவேந்திரன் மிகப்பெரிய இசைமேதை என்றால் அவரை உங்களின் அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தி அவருக்கு பெரிய வாழ்வு கொடுத்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை? வேதம் புதிது படத்திற்குப் பிறகு நாடோடி தென்றல் படத்திற்கு இளையராஜாவிடமே வந்துவிட்டீர்களே!
'என் உயிர் தோழன்' என்று பெயர் வைத்து விட்டு என் நண்பனின் பரிவாரங்களோடு பாட வருகிறேன்' என்று மார்தட்டிக் கொண்டீர்களே. அது நீங்கள் சொன்ன அந்த பிரிவுக்கு பின்தானே நடந்தது. அதுமட்டுமில்லாமல் உங்களின் அடுத்தடுத்த படங்களில் ரகுமான், அம்சலேகா, தேவா, சிற்பி, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், ஹிமேஸ் ரேஷ்மையா என்று இத்தனை இசையமைப்பளர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்களே ஏன் அப்போது தேவேந்திரன் நினைவுக்கு வரவில்லையா?
குறைந்தபட்சம் சின்னத்திரைகளில் நீங்கள் இயக்கிய தொடர்களுக்குக்கூட அவரை பயன்படுத்தியிருக்கலாமே ஏன் செய்யவில்லை.
ஒருமுறை இளையராஜாவிடம், "பாரதிராஜா படங்களில் பாடல்கள் இன்னும் ஸ்பெஷலாக இருக்கிறதே என்ன ரகசியம்," என்று கேட்டதற்கு, ராஜா சிரித்துக்கொண்டே, "சின்ன வயசிலிருந்தே ஒரே இடத்தில் விளையாண்டிருக்கோம். ஒண்ணாவே சாப்பிட்டிருக்கோம், தூங்கியிருக்கோம். அவருக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா. இதுதான் ரகசியம்..." என்றார் சிரித்தபடி. இதுதானே நட்பு.
இயக்குநர்கள் பாலா, அமீர் போன்றவர்கள் தங்களின் ஒரு படத்திலேயே இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள். இதற்காக உங்களையும் அவர்களையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்க முடியுமா?
ஒரு விஷயம் பாரதிராஜா சார். ஒருவருக்கு ஞானம் இருப்பது என்பது வேறு. அந்த ஞானத்தை வைத்து அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள். நாட்டிற்கு என்ன பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இளையராஜாவும் நீங்களும் இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்த ரத்தினங்கள். உங்களின் தனிப்பட்ட கோபதாபங்களை வெளிக்காட்டி சராசரி மனிதர்களாகி விடக்கூடாது என்பதுதான் என் போன்ற ரசிகர்களின் கவலை.
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இசையமைப்பாளர் தேவேந்திரன் சென்னை வில்லிவாக்கம் பகுதியில்தான் இருக்கிறார். உங்களின் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து அவருடைய வாழ்வை வளமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!
இப்படிக்கு
உங்கள் ரசிகன்.


Share:

Friday, September 4, 2015

பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி; சென்னை பல்கலைக்கழகம் கோரிக்கை

பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி; சென்னை பல்கலைக்கழகம் கோரிக்கை

பாலியல் கல்வியில் விழிப்புணர்வு கொண்டுவருவதற்காக பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியை பாடமாக வைக்கவேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறைத்தலைவர் எஸ்.சுமதி, பெண்கள் கல்வி மைய துறை தலைவர் (பொறுப்பு) பாரதி ஹரிசங்கர், இந்திய பாலியல் நிபுணர்கள் சங்க தலைவர் டாக்டர் டி.காமராஜ் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-


பாலியல் சுகாதார தினம்

சர்வதேச பாலியல் சுகாதார தினம் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தில் ‘பாலியல் உரிமை மனித உரிமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.

பாலியல் விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கம். அதுதான் எங்கள் நோக்கம். காதல் எது, காமம் எது, வாழ்க்கை எது, வாழ்க்கையை எப்படி திட்டமிடவேண்டும். என்பனவற்றை அறியாதவர்களாக இருக்கிறார்கள். தேவையில்லாத கர்ப்பம், கருத்து முரண்பாடு, பாலியல் வன்முறை, விவாகரத்து, உடல்நலத்தை பாதுகாக்க தவறுதல், மன உழைச்சல், பாலியல் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் ஏராளமானவர்கள் உள்ளனர்.

பள்ளிக்கூடத்தில் பாடம் 

எனவே பாலியல் விழிப்புணர்வை மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்த பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியை பாடமாக வைக்கவேண்டும். எனவே, இதை வலியுறுத்தி 1 லட்சம் பேர்களிடம் கையெழுத்து வாங்கி அதை பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அனுப்ப உள்ளோம். கையெழுத்து இயக்கத்தை இன்றே (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறோம்.

செல்போன், இணையதளம் ஆகியவை புதிய தொழில்நுட்பத்தினால் வந்தவை. அவை வரவேற்கத்தக்கவை ஆனால் அவற்றில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இப்போதுள்ள இளையதலைமுறையில் சிலர் அதில் உள்ள தீயவற்றை எடுத்துக்கொள்கிறார்கள். தீய பழக்கவழக்கத்திற்காக சில இணையதளங்கள் உள்ளன. அவற்றை அடியோடு மறந்துவிடுங்கள். இவ்வாறு அவர்கள் பேசினார்கள். 
Share:

Thursday, September 3, 2015

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக

யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...

மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?


‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.

இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.


தொடர்புக்கு : 97903 95796
www.chepparaivalaboomigreenworld.com
J
Share:

ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு



பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.

அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.

இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி நடக்கவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

குறைந்த பட்ச ஊதியம் ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!

குறைந்த பட்ச ஊதியம்  ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!
குறைந்த பட்ச ஊதியம் (Minimum Wage )
1.1.2014 அன்று ஒரு மத்திய அரசு
ஊழியரின் குறைந்த பட்ச சம்பளம் 5200 + 1800
= 7000 ஆகும். அன்றைய தேதியில் அவர்
வாங்கியது 100 % D.A. எனவே, அதையும்
சேர்த்து அவரது சம்பளம் 14 ஆயிரம் ஆகும்.
இதைத்தான் ரூ. 26000/- ஆக்க Staff side
(JCM) கோரி உள்ளது.
1957 ம் ஆண்டு இந்திய தொழிலாளர் 15
வது மாநாடு குறைந்த பட்ச ஊதியம்
எப்படி கணக்கிட வேண்டும் என்றும்
வரையறுத்து உள்ளது. இது Dr. Aykroyd
formula எனப்படுகிறது. இதன்படியான
வரையறைகள்.
1. ஒரு தொழிலாளியின் ஊதியம் என்பது
கணவன், மனைவி, இரு குழந்தைகளுக்குத்
தேவையான கலோரியை ஈடுகட்ட
தேவையான பொருள்களின் விலையை
அடிப்படையாக கொண்டது.
2. ஒரு நாளைக்கு ஒருவர் இழக்கும்
கலோரி 2700 ஆகும்.
3. கணவனுக்கு ஒரு unit. மனைவிக்கு
0.8unit . இரு குழந்தைகளுக்கு each 0.6
unit. ஆக மொத்தம் 3 unit க்கு தேவையான
செலவைக் கணக்கிட வேண்டும்.
4. இந்த நால்வரும் சேர்ந்து ஒரு மாதத்தில்
பயன்படுத்தும் குறைந்த பட்ச
பொருள்களின் பட்டியல்.
Commodity Quantity
1 அரிசி/ கோதுமை 42.75 Kg
2. பருப்பு வகைகள் 7.20 Kg
3. காய்கறிகள் 9.00 Kg
4. கீரை வகைகள் 11.25 Kg
5. இதர காய்கறிகள் 6.75 Kg
6. பழங்கள் 10.80 Kg
7. பால் 18.00 litre
8. சர்க்கரை / வெல்லம் 5 Kg
9. சமையல் எண்ணெய் 3.6 Kg
10 மீன் 2.5 Kg
11 மாமிசம் 5 Kg
12 . முட்டை 90
13 soap 14
14 Clothes 5.5 metre
1.1.2014 அன்று இந்த பொருட்களின் விலை
என்ன என்று கணக்கிடப் பட்டதில் அது ரூ.
11344/-
5. இத்துடன் 20 % உள்ளிட்டவற்றுக்கு
சேர்க்க வேண்டும். அது ரூ. 3129/- என்று
கணக்கிட பட்டு உள்ளது.
6. 3rd Central Pay Commission
குடிஇருக்கும் வீட்டுக்காக (HRA) 7.5 %
சேர்த்தது.
7. ஆக மொத்தம் ரூ. 15647/-
8. Supreme court ஒரு தீர்ப்பில் இவற்றுடன் 25
சதம் மருத்துவ செலவுகளுக்கும் கல்வி
செலவுகளுக்கும் சேர்க்க கோரி உள்ளது.
அந்த அடிப்படையில் ரூ. 20861/- ஆகிறது.
இது unskilled employee க்கான கணக்காகும்.
ஆனால் இன்று மத்திய அரசில் அனைத்து
துறைகளிலும் குறைந்த பட்ச கல்வித்
தகுதி unskilled employee க்கே 10ஆம்
வகுப்பு என்று வந்து விட்டதால் மத்திய
அரசில் அனைவருக்கும் குறைந்த பட்ச
ஊதியமாக skilled employee சம்பளத்தை
நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி
உள்ளனர். அதற்கு unskilled employee
சம்பளமான ரூ. 20861/- உடன் 25% சேர்க்க
வேண்டும். அது ரூ. 5214/- அதை
சேர்த்தால் ரூ. 26075/- வருகிறது.
ஆகவே ரூ.26000/- த்தை Minimum wage
என்று நிர்ணயிக்க வேண்டும் என STAFF SIDE
(JCM) கோரி உள்ளனர்.
Share:

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் விவரம்

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் முந்தைய விவரம் : தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது, பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் திடீரென்று 5சதவீத இடஒதுக்கீடும் வெயிட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.
அதில் வெயிட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது, அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செய்து உத்ததரவிட்டது ....
ஆசிரியர் தகுதித்தேர்வின் இன்றைய நிலை:
இன்று கோர்ட் நமபர் 9இல் 3ஆவது வழக்காக வந்தது ... ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகத்தினர் மற்றும் பலரால் தொடுக்கப்பட்ட வெய்ட்டேஜ் வழக்கும் அரசால் தொடுக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5 சதவீத மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.. இன்று பல வழக்கறிஞர்கள் வராத நிலையிலும் நமது வழக்கறிஞர் திரு இராஜாஇராமன் அவர்கள் ஆஜராகி இருந்தார்..
இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற எதிர்மனுதாரர் (5 சதவீத ரத்து உத்தரவு வாங்கியவர் ) வின்சென்ட் அவரது பதிலையும் வாங்கும் பொருட்டு அவருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்...
என்.சி.டி.இ-யையும் ஒரு மனுதாராக சேர்க்க கோரிக்கை :
ஆசிரியர் தகுதிததேர்வு என்பது என்.சி.டி.யின் விதிமுறையின் படியும் ஆலோசனையின் படியும் நடத்தப்படுகிறது ஆகவே இந்த வழக்கில் என்.சி.டி.யும் ஒரு மனுதாரராக சேர்க்கவும் கோரிக்கை செய்தனர்..
என்.சி.டி.இ.யை ஆலோசிக்காமல் 5சதவீதம் சாத்தியமா?
ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் அதன் வரையறைகள் அனைத்தும் என்.சி.டி.யின் படி உள்ளது... 2012 மற்றும் 2012மறு தேர்வு என இரு தேர்வுகள் அவர்களின் வரையறை படி நடத்திவிட்டு திடீரென்று 2013 தேர்வுக்கு மட்டும் என்.சி.டி.யை கலந்து ஆலோசிக்காமல் 5 சதவீதம் இட ஒதுக்கீடு எவ்வாறு அளித்தார்கள் அவ்வாறு அளிக்க தமிழக அரசால் இயலுமா? அதற்கு அதிகாரம் வரைமுறை உள்ளதா? நமது சங்க வழக்கறிஞர் தெளிவான வாதத்ததை முன்வைக்கிறார்.... என்.சி.டி.இ -யை தமிழக அரசு பரிசீலிக்காமல் கொடுத்தா? என அறிய அவர்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பவும் ஒரு மனுதாரராக சேர்க்க வாய்ப்பு.... கலந்து ஆலோசிக்காமல் கொடுத்தது தெரிய வந்தால் 5சதவீதம் ???
போட்ட அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?
5சதவீதம் வழக்கு குறித்து நமது வழக்கறிஞர் திரு இராஜஇராமன் அவர்கள் தெரிவித்தது ' இவ்வழக்கு என்பது புதிய அத்தியாயம் படைக்கும் என நம்பிக்ககை தெரிவித்தார் மேலும் 5சதவீத சலுகை குறித்து கேட்டபோது... மாநில அரசுக்கு 5சதவீதும் அளிக்க உரிமை இருக்கிறதா இல்லையா என என்.சி.டி தான் விளக்கவேன்டும்.. ஒருவேளை அவர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்களின் அனுமதி இல்லாமல் சலுகை அளித்திருந்தால் வழக்கு மேலும் சிக்கலாகும் என சூசகமாக தெரிவித்தார்....

Share:

Tuesday, August 25, 2015

7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.



7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

டெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் 7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதியக் கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
7-வது ஊதியக் கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
7- வது ஊதிய கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ .1 லட்சம் கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது. 7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
Share:

Saturday, August 15, 2015

20 வயது திருச்சி கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ
Share:

வாட்ஸ் அப்பில் பரவிவரும் நெஞ்சை தொடும் உரையாடல்.!

வாட்ஸ் அப்பில் பரவிவரும் நெஞ்சை தொடும் உரையாடல்.!

''நான் வேலைக்கு போறேன்...

என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!''

கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.

நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குதான் வேலையில்லையே

நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

ம்... காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

''ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலுமாய் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!

- இது வாட்ஸ்ஆப் மூலமாக பரவிக் கொண்டிருக்கும் நெஞ்சைத் தொடும் ஒரு பதிவு.

நன்றி:விகடன்3:07
Share:

Saturday, May 30, 2015

CENTRAL GOVT TEACHER POST APPLICATION

CENTRAL GOVT TEACHER POST APPLICATION
https://jobapply.in/kvs/
Share:

Monday, May 11, 2015

8 வருடத்துக்கப்புறம் வருமானத்துக்குரிய சான்றிதழ்களை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்

18 வருடத்துக்கப்புறம் வருமானத்துக்குரிய சான்றிதழ்களை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்துவிட்டு சென்றுவிட்டார்.
சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி, தீர்ப்பை வாசிக்க தொடங்கிய உடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
இதனிடையே, வருமானத்துக்குரிய சான்றிதழ்களை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.
Share:

Saturday, April 11, 2015

தலைமை ஆசிரியர் ஆசிரியை தலைமை ஆசிரியர் அறையில் உல்லாசம்.விடியோ

தலைமை ஆசிரியர் ஆசிரியை தலைமை ஆசிரியர் அறையில் உல்லாசம்.விடியோ

Share:

மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் தமிழ்நாட்டில்தான். ஆசிரியையை தூக்கி கொஞ்சும் புகைப்படத்துடன்

மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் தமிழ்நாட்டில்தான். ஆசிரியையை தூக்கி கொஞ்சும் புகைப்படத்துடன்.

Share:

Wednesday, January 14, 2015

ஐ படம் எப்படி(விமர்சனம்)

ஐ படம் எப்படி(விமர்சனம்)

ஐ படம் ஏராளமான எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள நிலையில் அதன் ரிசல்ட் என்ன என்ற எதிர்பார்ப்பும் எல்லொரிடமும் உள்ளது.
                                        விக்ரமின் அபார நடிப்பாற்றல்,எமியின் அருமைய்யன நடிப்பு,ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாத இசை , பி.சி.ஸ்ரீராமின் ப்ரம்மாண்ட ஒளிப்பதிவு,பார்க்காத புதிய லொக்கேசன்கள் பிறகென்ன படம் சூப்பர் , டூப்பர் ஹிட் தானே என்கிறீர்கள்.கதை பழைய பழிக்கு பழி.என்னைக்கு வேறு களம் காண்பீர்கள் அண்ணே!
விளம்பர படத்தில் காதலி உதவியுடன் பிரபலமாகும் விக்ரம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிப்பில் கலப்படம் உள்ளது என்பதால் நடிக்க மறுக்கிறார்.அந்த கம்பெனி ஆட்கள் விக்ரமிற்கு விரச் ஊசி பொட அவர் விகார விக்ரமாகிரார்.பிறகு,பழிக்கு பழி.
Share:

Friday, January 9, 2015

பிரபாகரன் இல்லாத மண்ணை முத்தமிட்டு வண்ங்கிய ராஜபக்க்ஷே தமிழர்களால் மண்ணை கவ்வினார்!

பிரபாகரன் இல்லாத மண்ணை முத்தமிட்டு வண்ங்கிய ராஜபக்க்ஷே தமிழர்களால் மண்ணை கவ்வினார்!

Share:

கவர்ச்சி போஸ் கொடுத்த வித்யா பாலன் படங்கள்.

கவர்ச்சி போஸ் கொடுத்த வித்யா பாலன்  படங்கள்.


Share:

Blog Archive

Definition List

Unordered List

Support