This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Sunday, September 6, 2015
பாரதிராஜா-இளையராஜா நட்பும்,நடப்பும்
Friday, September 4, 2015
பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி; சென்னை பல்கலைக்கழகம் கோரிக்கை
பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி; சென்னை பல்கலைக்கழகம் கோரிக்கை
Thursday, September 3, 2015
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக
யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...
மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.
என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.
இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : 97903 95796
www.chepparaivalaboomigreenworld.com
J
ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக அஞ்சல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.
அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி நடக்கவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச ஊதியம் ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!
குறைந்த பட்ச ஊதியம் (Minimum Wage )
1.1.2014 அன்று ஒரு மத்திய அரசு
ஊழியரின் குறைந்த பட்ச சம்பளம் 5200 + 1800
= 7000 ஆகும். அன்றைய தேதியில் அவர்
வாங்கியது 100 % D.A. எனவே, அதையும்
சேர்த்து அவரது சம்பளம் 14 ஆயிரம் ஆகும்.
இதைத்தான் ரூ. 26000/- ஆக்க Staff side
(JCM) கோரி உள்ளது.
1957 ம் ஆண்டு இந்திய தொழிலாளர் 15
வது மாநாடு குறைந்த பட்ச ஊதியம்
எப்படி கணக்கிட வேண்டும் என்றும்
வரையறுத்து உள்ளது. இது Dr. Aykroyd
formula எனப்படுகிறது. இதன்படியான
வரையறைகள்.
1. ஒரு தொழிலாளியின் ஊதியம் என்பது
கணவன், மனைவி, இரு குழந்தைகளுக்குத்
தேவையான கலோரியை ஈடுகட்ட
தேவையான பொருள்களின் விலையை
அடிப்படையாக கொண்டது.
2. ஒரு நாளைக்கு ஒருவர் இழக்கும்
கலோரி 2700 ஆகும்.
3. கணவனுக்கு ஒரு unit. மனைவிக்கு
0.8unit . இரு குழந்தைகளுக்கு each 0.6
unit. ஆக மொத்தம் 3 unit க்கு தேவையான
செலவைக் கணக்கிட வேண்டும்.
4. இந்த நால்வரும் சேர்ந்து ஒரு மாதத்தில்
பயன்படுத்தும் குறைந்த பட்ச
பொருள்களின் பட்டியல்.
Commodity Quantity
1 அரிசி/ கோதுமை 42.75 Kg
2. பருப்பு வகைகள் 7.20 Kg
3. காய்கறிகள் 9.00 Kg
4. கீரை வகைகள் 11.25 Kg
5. இதர காய்கறிகள் 6.75 Kg
6. பழங்கள் 10.80 Kg
7. பால் 18.00 litre
8. சர்க்கரை / வெல்லம் 5 Kg
9. சமையல் எண்ணெய் 3.6 Kg
10 மீன் 2.5 Kg
11 மாமிசம் 5 Kg
12 . முட்டை 90
13 soap 14
14 Clothes 5.5 metre
1.1.2014 அன்று இந்த பொருட்களின் விலை
என்ன என்று கணக்கிடப் பட்டதில் அது ரூ.
11344/-
5. இத்துடன் 20 % உள்ளிட்டவற்றுக்கு
சேர்க்க வேண்டும். அது ரூ. 3129/- என்று
கணக்கிட பட்டு உள்ளது.
6. 3rd Central Pay Commission
குடிஇருக்கும் வீட்டுக்காக (HRA) 7.5 %
சேர்த்தது.
7. ஆக மொத்தம் ரூ. 15647/-
8. Supreme court ஒரு தீர்ப்பில் இவற்றுடன் 25
சதம் மருத்துவ செலவுகளுக்கும் கல்வி
செலவுகளுக்கும் சேர்க்க கோரி உள்ளது.
அந்த அடிப்படையில் ரூ. 20861/- ஆகிறது.
இது unskilled employee க்கான கணக்காகும்.
ஆனால் இன்று மத்திய அரசில் அனைத்து
துறைகளிலும் குறைந்த பட்ச கல்வித்
தகுதி unskilled employee க்கே 10ஆம்
வகுப்பு என்று வந்து விட்டதால் மத்திய
அரசில் அனைவருக்கும் குறைந்த பட்ச
ஊதியமாக skilled employee சம்பளத்தை
நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி
உள்ளனர். அதற்கு unskilled employee
சம்பளமான ரூ. 20861/- உடன் 25% சேர்க்க
வேண்டும். அது ரூ. 5214/- அதை
சேர்த்தால் ரூ. 26075/- வருகிறது.
ஆகவே ரூ.26000/- த்தை Minimum wage
என்று நிர்ணயிக்க வேண்டும் என STAFF SIDE
(JCM) கோரி உள்ளனர்.










